கேரளா || தேயிலை தோட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது..!
4 person arrested in Kerala
தேயிலை தோட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளாவில் உள்ள தேயிலை தோட்டத்தில் மேற்குவங்காளத்தை சேர்ந்த தம்பதி தங்கள் 15 வயது மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்கு வந்துள்ளனர். அவர்கள் இடுக்கி மாவட்டம் சந்தன்புரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வந்தனர்.
அந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பருடன் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் அங்கு பேசி கொண்டிருந்த போது அங்கு வந்த நான்கு பேர் அந்த சிறுமியை தேயிலை தோட்டத்தில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த சிறுமியின் நண்பன் கூச்சலிட்டதில் அக்கம்பக்கதினர் ஓடி வந்தனர். இதனை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தப்பியோடிய நான்கு பேடை தேடி வந்த நிலையில், 4 பேரையும் கைது செய்தனர். இதில், 2 பேர் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் சிறுவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
English Summary
4 person arrested in Kerala