எனது சாக்லேட்டுகளை திருடும் தாயை கைது செய்யுங்கள்.. போலீசில் புகாரளித்த சிறுவன்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


3 வயது சிறுவன் தனது தாய் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் 3 வயது சிறுவன் தனது அம்மாவிடம் சாப்பிடுவதற்காக சாக்லேட் கேட்டு உள்ளான். ஆனால் அவர் ஒளித்து வைத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் தனது தந்தையிடம் சென்று அம்மா சாக்லேட்களை திருடி விட்டார் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளான்.

இதனைக் கேட்டு  பெற்றோர்கள் இருவரும் சிரித்துள்ளனர். இருப்பினும் சிறுவன் புகார் அளிக்க வேண்டும் என அடம் பிடித்ததால் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் எனது தாய் எனக்காக வைத்திருந்த சாக்லேட்களை திருடிவிட்டதாக கூறி புகார் அளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 year old son complaint to mother in police station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->