பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ பதிவிட்ட மாணவர்கள்.. அதிரடி முடிவெடுத்த காவல்துறை..!!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி வீடியோ பதிவிட்ட 3 மாணவர்களை கர்நாடகா போலீஸ் கைது செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.எல். பல்கலைக்கழகம் ஒன்றில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் காஷ்மீரை சேர்ந்த மாணவர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர்.

அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. இதை தொடர்ந்து அந்த மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பல்கலைக்கழக சார்பிலும் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 3 மாணவர்களும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 students arrest in karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->