ஒரே நேரத்தில் விஷம் குடித்த 3 மாணவிகள்.! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் மூன்று மாணவிகள் 12 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த மூன்று பேரும் மிக நெருங்கிய தோழியாக இருந்தனர். இவர்கள் சம்பவ தினத்தில் பள்ளியிலிருந்து 120 கிலோமீட்டர் அப்பால் இருக்கும் இந்தூர் பகுதிக்கு சென்று மூன்று பேரும் சேர்ந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்தனர். 

இந்த மாணவிகள் மயக்க நிலையில் கடந்த போது அவர்களைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மூன்று பேரில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒரு மாணவி மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரிடம் போலீசார் விசாரித்ததில் நாங்கள் மூன்று பேரும் மிக நெருங்கிய தோழிகள். எனது தோழியில் ஒருத்தி ஒருவனை காதலிக்கிறார். அந்த காதலனை பார்க்கத்தான் நாங்கள் மூன்று பேரும் இந்துரூக்கு சென்றோம். ஆனால், காதலன் தோழியை சந்திக்கவில்லை. 

இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். எனது இன்னொரு தோழி தனது குடும்ப நிலையை நினைத்து பார்த்து விஷம் குடித்தார். என் இரண்டு தோழிகளும் விஷம் குடித்ததால் அவர்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று நானும் விஷம் குடித்தேன் என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதை அறிந்த போலீசார் அதிர்ந்து போக பெற்றோர்களோ கதறி அழுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 school girl took poison in same time


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->