கர்நாடகா : திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நேபாளத்தை சேர்ந்த 3 பேர் கைது.!
3 people from Nepal arrested for theft incidents in Karnataka
கர்நாடக மாநிலத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நேபாளத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் வழக்கமான இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பூட்டி இருந்த நகை கடை முன்பு மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் மூன்று பேரில் கைரேகை பதிவுகள் பழைய திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட கைரேகைகளுடன் ஒத்துபோனது.
மேலும் விசாரணையில் மூன்று பேரும் பெங்களூரு உட்பட பிற மாவட்டங்களிலும், பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததம், இவர்கள் 3 பேரும் நேபாளத்தை சேர்ந்த பரத் தாமி, மங்கள் சிங், குபேர் பகதூர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், இவர்கள் மூன்று பேரையும் கைது செய்து திருடப்பட்ட நகைகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
3 people from Nepal arrested for theft incidents in Karnataka