சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்.. 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.!
22 years imprisonment for Youth who made the girl pregnant in Karnataka
கர்நாடக மாநிலத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள ஹலகூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(25). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது கடந்த 2020ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை இதுப்பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
இதனால் அச்சமடைந்த சிறுமி இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் மகேசும் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து சிறுமி கர்ப்பமானதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்பொழுது சிறுமி நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவி மற்றும் மகேசை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் சிறுமியை கர்ப்பமாக்கிய ரவிக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மகேஷுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 19 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
22 years imprisonment for Youth who made the girl pregnant in Karnataka