திருவனந்தபுரம் மேயர் பதவிக்கு 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் தேர்வு.!
21 Years Young Women girl Arya Rajendran Select Tiruvandrum Mayor Post
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு 21 வயது இளம்பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆர்யா ராஜேந்திரன் என்ற இளம்பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அரசியல் பயணத்தை துவங்கிய பெண்மணி ஆர்யா ராஜேந்திரன் (வயது 21).
இவர் கட்சிக்காக தீவிர களப்பணியாற்றி, பொதுசேவையையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கேரளா உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகள் பகுதியில் வார்டு கவுன்சிலருக்கும் போட்டியிட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்யா ராஜேந்திரனின் தந்தை கூலித்தொழிலாளி என்பது, ஆர்யா ராஜேந்திரன் பி.எஸ்.சி இரண்டாம் வருடம் பயின்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
21 Years Young Women girl Arya Rajendran Select Tiruvandrum Mayor Post