தந்தை கண்முன்னே உடல்நசுங்கி பலியான சிறார்கள்.. ஆவடி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


சாலைவிபத்தில் தந்தை கண்முன்னே மகன்கள் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆவடியை சேர்ந்தவர் செல்வம் (39). இவருக்கு திருமணமாகி சுமலதா என்ற மனைவியும் ஆதிரன் (4), கவுசிக் (2) என இரு மகன்கள் உள்ளனர்.  அவரது உறவினர் சபரிமலைக்கு செல்ல வழியனுப்பி விட்டு வீட்டிற்கு கிளம்பிவந்தனர்.

இதில், உறவினர்கள் காரில் வர செல்வம் மட்டும் இரு சக்கர வாகனத்தில் வருவதாக கூறினார். அதனை கண்ட குழந்தைகள் இருவரும் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கரவாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதி சரிந்தது.

அப்போது எதிர்பாரத விதமாக எதிரில் வந்த லாரி இரு குழந்தைகளின் மீது  ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Children Death in Accindent Near avadi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->