கர்நாடகா : பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி.! தவறி விழுந்த 2 சிறுவர்கள் பலி.!
2 boys died after falling into a pit dug for underground sewerage in Karnataka
கர்நாடக மாநிலத்தில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழுவில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் பாகவதா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய தம்பி சுரேஷ். இதில் திருமணமாகி ரமேஷுக்கு அஜய்(8) என்ற மகனும், சுரேஷுக்கு எல்லலிங்கா(6) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்து விளையாடுவதற்கு நேற்று முன்தின மாலை சென்ற இரண்டு சிறுவர்களும் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் பள்ளிய அருகே பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த கழிவு நீரில் இரண்டு சிறுவர்களும் பிணமாக மிதந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட குழி அதிகாரிகள் மூடாததால் தான் சிறுவர்கள் உயிரிழந்தனர் என்று கிராம மக்கள் குற்றம் சட்டியுள்ளனர்.
English Summary
2 boys died after falling into a pit dug for underground sewerage in Karnataka