#BigBreaking : நிவர் புயல் எதிரொலி.! புதுச்சேரியில் இன்று முதல் 3 நாள் 144 தடை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நிவர் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அந்த எச்சரிக்கையில், சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது. வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக, நிவர் புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, புதுச்சேரி முதல்வர் சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தரவில், "இன்று முதல் வரும் 26 ஆம் தேதிவரை புது சேரியில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிவர் புயல் கரையை கடக்கும் வரை, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 26 ஆம் தேதி மாலை 3 மணி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 in puthuchery nivar cyclone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->