மாநிலம் முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை 144 தடை அமல்.. முதலமைச்சர் உத்தரவு.!
144 in puducherry
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுவெளிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு அமல் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.