12 வயது சிறுமி பலாத்காரம்.. ஆபாச தளத்திற்கு நிர்வாண படம் அனுப்ப திட்டமிட்டது அம்பலம்..!
12 years old girl sexual harassment in kerala
கேரளா மாநிலம், கொச்சியில் காதலிப்பதாக ஏமாற்றி 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவத்தில் கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, போலீசாரின் விசாரணையில் சிறுமியின் நிர்வாண படத்தை ஆபாச இணையதளத்துக்கு அனுப்ப முடிவு செய்தது அம்பலமாகி உள்ளது.
கேரள மாநிலம் கொச்சி வடுதலா பகுதியை சேர்ந்தவர் பிபின் (25). இவரது மனைவி வர்ஷா (19). பிபின் அந்த பகுதியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் லிதின் (19) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
பிபினின் வீட்டு மாடியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 12 வயதில் மகள் உண்டு . அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். பிபின் வீட்டுக்கு அடிக்கடி லிதின் வருவது வழக்கம்.
அப்போது மாடி வீட்டில் வசிக்கும் சிறுமியுடன். அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலர்களாகி உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது லிதின் சிறுமியை அழைத்து ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து, பிபின் மற்றும் வர்ஷாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து லிதின் பலாத்காரம் செய்வதை வீடியோ எடுக்க இருவரும் திட்டமிட்டனர். இதன்படி மற்றொரு முறை லிதின் சிறுமியை அழைத்து வந்து பலாத்காரம் செய்தபோது பிபின் வீடியோ கேமரா மூலம் படம் பிடித்துள்ளார்.
அதன் பிறகு பிபினும், வர்ஷாவும் அந்த மாணவியிடம், தங்களிடம் பலாத்கார வீடியோ காட்சி இருக்கிறது. எனவே நாங்கள் சொல்வதுபோல் செய்ய வேண்டும் என்று கூறி, நிர்வாணமாக நிற்குமாறு கூறி மிரட்டியுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோர் கொச்சி வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து பிபின், அவரது மனைவி வர்ஷா மற்றும் லிதின் ஆகிய பேரையும் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில்,பிபினும், வர்ஷாவும் சிறுமியின் நிர்வாண படத்தை எடுத்து ஆபாச இணையதளத்துக்கு அனுப்ப தீர்மானித்தது தெரியவந்தது. சிறுமிகள் ஆபாச படங்களை இணைய தளத்தில் வெளியிட்டால் அதிக பணம் கிடைக்கும் என்று நினைத்து அவர்கள் இவ்வாறு திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
English Summary
12 years old girl sexual harassment in kerala