தொடரும் மர்ம மரணங்கள்.. 12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்.!
12 years old boy death heart attack in Karnataka
சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும், குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகர் தாலுகா கூடு மங்களூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி. இவர் தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 12 வயதில் கீர்த்தன் என்ற மகன் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுவன் கீர்த்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். சமீப சில நாட்களாக இளம் வயதினர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வரும் நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
12 years old boy death heart attack in Karnataka