செல்போனில், அந்தப்படத்தை கண்டு 2 வயது சிறுமியிடம், தகாத வேலை பார்த்த சிறுவன்.! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக சிறுவர்கள் செல் போன்களை பயன்படுத்துவது அதிகமாகி வருகின்றது. இதனால், சமூக சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. நல்ல விஷயங்களுக்கு விஞ்ஞானத்தை பயன்படுத்தாமல் எந்த நேரமும் கேம் விளையாடுவது, கண்ட கண்ட படங்களை பார்த்து கெட்டுப் போவது என்று சிறுவர்கள் மோசமான நிலைக்கு ஆளாகி வருகின்றனர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை யில் ஒரு தாய் தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை வீட்டிற்கு அருகே விளையாட வைத்து விட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டு 12 வயது சிறுவனிடம் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த சிறுவன் செல்போனில் பலான படத்தை பார்த்துக்கொண்டு இருந்துள்ளான். எனவே, அந்த தாய் வீட்டிற்கு வருவதற்குள் இரண்டு வயது குழந்தையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்துள்ளான். 

அந்த சிறுவன் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கின்றான். இதனால், குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு தாயிடம் கொடுத்துவிட்டு அசம்பாவிதம் குறித்து தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சிறுவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 year boy try to rape 2 years female child 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->