ஆண் குழந்தைக்காக.. 11 பெண்களை பெற்றெடுத்து, 12வது முயற்சியில் நிகழ்ந்த சம்பவம்.!
12 babies for a lady
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சிரு என்ற மாவட்டத்தில் ஜாத்சர் நகர் பகுதியைச் சேர்ந்த கதி என்ற பெண்ணுக்கு 42 வயதாகிறது. இவருக்கும், இவருடைய கணவருக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.
ஒவ்வொரு முறை கர்ப்பம் தரிக்கும் போதும், மிகவும் ஆசையாக குழந்தையை எதிர்பார்த்த நிலையில் பெண் குழந்தைகளே அவர்களுக்கு பிறந்துள்ளது. இதுபோன்று 11 குழந்தைகளை பெற்றெடுத்தார் கதி.
அதன்பின்னர் தொடர்ந்து முயற்சித்து 12வது முறையாக கர்ப்பம் தரித்து இருந்தார் கதி. இவருடைய மூத்த பெண் இரூவர்களுக்கு திருமணமே முடிந்துவிட்டது.
இந்நிலையில் பிரசவத்திற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பொழுது, அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் காரணமாக குடும்பத்தினரும், உறவினர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.