அதிக பாசத்தால் பறிபோன குழந்தையின் உயிர்.! 11 மாதத்திலேயே இப்படி ஒரு துயர்.!
11 month baby killed by his sister
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கசாசனம் என்ற கிராமத்தில் கணவருடன் வசித்து வரும் காவியா என்ற பெண்ணுக்கு நிர்மலா மற்றும் ஹேமஸ்ரீ ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
இதில் 11 மாத கைக்குழந்தையாக இரண்டாவது மகள் மீது குடும்பத்தினர் பெற்றோர் அதிக பாசம் வைத்துள்ளனர். இது இயல்புதான் என்றபோதும் ஐந்து வயது குழந்தையான நிர்மலா ஆத்திரம் அடைந்துள்ளார்.
தற்போது தன்னை விட புதிதாக பிறந்த தன் தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் வைத்து உள்ளார்கள் என்பதே அந்த ஆத்திரத்திற்கு காரணமாகியுள்ளது. ஆகவே பக்கத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீரென்று காணாமல் போயுள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அந்த குழந்தை கிடைக்கவில்லை.
அதன்பின் அந்தக் குழந்தை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹேமஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது சந்தேகம் ஏற்பட அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
ஹேமஸ்ரீ பிறந்தது முதல் பெற்றோர்கள் அதிக பாசத்துடன் இருந்ததாகவும் எனவே தான் தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டேன் என்று நிர்மலா அப்பாவியாக கூறி உள்ளார். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
English Summary
11 month baby killed by his sister