கர்நாடகா : ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 11 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் உள்ள பெல்லடி பகுதியில் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதையடுத்து முகாம் முடிந்து மாலை, தனியார் மருத்துவக் குழுவினர் 11 பேர் ஆம்புலன்ஸில் உப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது சம்கி-சிரூர் சாலையில் ஆம்புலன்ஸ் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஆம்புலன்சில் சென்ற கள்ளப்பனவர் (22) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஓட்டுநர் உட்பட 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவ்வழியாக சென்றவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 killed 11 injured in ambulance overturned in Karnataka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->