அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள கர்ப்பிணி பெண்கள் அவர்களின் பிரசவ நேரத்தில் சிசேரியன் முறையின் மூலமாக குழந்தைகளை பெற்றெடுத்து கொள்கின்றனர். இன்றளவில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு உடல் வலிமை மற்றும் மன வலிமை குறைவாக உள்ள காரணத்தாலேயே இந்த முறையானது பெரும்பாலான பெண்களால் கையாளப்படுகிறது. 

கர்ப்பிணி பெண்கள் சுக பிரசவத்தின் சமயத்தில் ஏற்படும் வலியை தாங்க முடியாமல் உயிருக்கு எதாவது ஆகிவிடும் என்ற அச்சத்தில்., பணம் செலவானாலும் பிரச்சனை இல்லை என்று சிசேரியன் முறையை மேற்கொண்டு குழந்தையை பெற்றெடுக்கின்றனர். சிசேரியன் முறையை பொறுத்த அளவில்., குழந்தையை எளிதாக பெற்றெடுத்தாலும்., அதற்கு பின்னர் உடலின் ஆரோக்கியத்தை அடைவது., பழைய உடல் உழைப்பில் ஈடுபடாமல் இருப்பது அல்லது இயலாமை மற்றும் கழிவறை சென்று வருவது என்று பல இன்னல்கள் உள்ளது. 

அறுவை சிகிச்சை முறையின் மூலமாக குழந்தையை பெற்றெடுக்கும் சமயத்தில் பெண்களுக்கு வலியானது அதிகமாக இருக்கும்., இந்த வலியை குறைப்பதற்கு மருத்துவர்கள் மருந்துகளை வழங்குவதன் மூலமாக., அந்த சமயத்தில் ஏற்படும் வலியானது தற்காலிகமாக ஏற்படாமல் இருக்கும். இந்த நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த பின்னர்., உடலுக்கு சத்துக்களை வழங்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த சமயத்தில் தயிர் சார்ந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலமாக ஆரோக்கியமானது அதிகரிக்கும். 

அறுவை சிகிச்சை செய்த இடத்தில்  இருக்கும் கீறல்களில் நோய் தொற்றுகள் ஏதும் ஏற்படாத வண்ணமும்., அதிகளவு அழுத்தம் தராமலும் பாதுகாத்து கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் குளிக்க உபயோகம் செய்யும் நீரானது சுத்தமானதாக உள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுத்த பின்னர் நடைப்பயிற்சியை மேற்கொள்வது., உடலில் இரத்த கட்டிகள் ஏற்படாமல் பாதுகாக்கும். இதுமட்டுமல்லாது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின் சி., புரத சத்துக்கள் உணவை சாப்பிட்டால் தசையை வலிமையடைய உதவும். 

பொதுவாக பிரசவத்திற்கு முன்னதாகவும் பிரசவத்திற்கு பின்னரும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண்கள் உட்கார்ந்து மலம் கழிக்கும் பட்சத்தில்., அழுத்தத்தின் காரணமாக இரத்த கசிவு ஏற்படலாம்., இதனை தவிர்ப்பதற்கு நாற்காலி அல்லது EWC என்று அழைக்கப்படும் (European Water Closet) உபயோகிப்பது நல்லது. இதுமட்டுமல்லாது மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்ப்பதற்கு நார்ச்சத்துக்கள் கொண்ட உணவு சாப்பிட வேண்டும். 

குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் வழங்க வேண்டும்., அதிக எடையுள்ள பொருட்களை இந்த நேரத்தில் எடுப்பதோ அல்லது தூக்குவதோ நல்லதல்ல. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் அதிக வலியானது ஏற்படும். அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை பெற்றெடுத்த பின்னர் கணவருடன் தாம்பத்தியம் மேற்கொள்ளும் சமயத்தில் அதிகளவு வலி ஏற்படும் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சனையானது சுமார் 18 மாதங்கள் தொடரவும் வாய்ப்புள்ளது. 

இன்றுள்ள நிலையில் உடலுக்கு சத்தான உணவு வகைகளை எடுத்து சாப்பிட்டு வந்தாலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார்., பெண் மற்றும் அவரது வீட்டார் சார்பில் இருந்து வரும் அன்பும்., அரவணைப்பும்., தைரியமும் தான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முதல் மருந்தாக உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women who gave birth to baby a surgery know about problems and solutions


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->