சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதை மட்டும், இப்படிச் செய்தால் போதும்…! படிப்படியாகக் குறையும்…! செய்து பாருங்கள்….!
simple treatment for the diabetees
நீரிழிவு என்பது, தற்போது உலக அளவில், மனித சமுதாயத்திற்கு வரும், சவாலான உடல் பாகுபாடு நோய். சர்க்கரை என்பது நோயல்ல. அது நம் உடலில் உள்ள கணைய சுரப்பியின் கோளாறான செயல்பாடு. அவ்வளவு தான்.
சர்க்கரை நோய் என்பது, தற்போது, மிகச் சாதாரண ஒன்றாகி விட்டது.
இதற்காக, அவரவர் உடலில் உள்ள சர்க்கரையின் அளவிற்கேற்ப மாத்திரைகளும், இன்சுலினும் எடுத்துக் கொள்கிறார்கள்.
இது வாழ்நாள் முழுக்க எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள். குறிப்பாக, உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், அதன் அளவு கூடுமே தவிர, குறையாது. அதற்கேற்றாற் போல், நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவையும், அதற்கேற்றாற் போல், கூட்டிக் கொள்ள வேண்டும்.
ஆனால், மிக எளிய முறையில், இந்த சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.
இரவு துாங்கச் செல்வதற்கு முன்பாக, இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை, குறுக்கே இரண்டாகக் கீறி, வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு செம்பு குடி தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு, நேராகப் போட்டு வையுங்கள். பின், அந்தச் செம்பினை, தட்டு கொண்டு மூடி வையுங்கள்.
இரவு நேரத்தில், இடையே, இந்த தண்ணீரைக் குடிக்க கூடாது. காலை எழுந்து, காலைக் கடன்களை முடித்து விட்டு, வெறும் வயிற்றில், இரவு முழுவதும், வெண்டைக்காய் கீற்றில் ஊறியிருந்த தண்ணீரை, எடுத்துக் குடியுங்கள்.
அந்த செம்பு நீரில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவையும் குடித்து விடுங்கள்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாகக் குறையும்.
இதற்காக, நீங்கள் சர்க்கரை நோய்க்காக, சாப்பிடும் மாத்திரைகளை விட்டு விடக் கூடாது. பலர் செய்யும் தவறு இது தான்.
இந்த வெண்டைக்காய் தண்ணீரையும் குடித்துக் கொண்டிருக்க வேண்டும். மாத்திரை மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாளடைவில், சர்க்கரையின் அளவு குறையும். அப்போது, சர்க்கரையின் அளவிற்கேற்ப, மாத்திரை மருந்துகளின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
English Summary
simple treatment for the diabetees