மூளையின் செயல்பாடு துரிதமாக... கொக்கு பற... பற... கோழி பற... பற.!
kokku par par
கிராமப்புற விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக இருக்கின்றது.
சில விளையாட்டுகளை விளையாடினாலே போதும் உடற்பயிற்சிகள் ஏதும் செய்யாமல் உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றுதான் கொக்கு பற...பற... கோழி பற...பற..
எத்தனை பேர் விளையாடலாம்?
எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
பறவைகளின் பெயர்களைச் சொல்லி, 'பற... பற..." என்று சொல்ல, அனைவரும் தனது கையை அசைக்க வேண்டும். இப்படி வேகமாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே, திடீரெனத் தலைவர் 'நாய் பற... பற..." என்று சொல்ல, அனைவரும் கை அசைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் பறவையை போல கை அசைத்தால் அவர் 'அவுட்". நாய் பறக்குமா, என்ன?
பயன்கள் :
உடல் வலிமை மேம்படும்.
மூளையின் செயல்பாடு துரிதமாகும்.
கூர்ந்து கேட்கும் திறன் அதிகரிக்கும்.
எடுக்கும் முடிவில் நிலையாக இருக்கும் திறன் மேம்படும்.