பற்களை சுத்தம் செய்ய சோம்பேறியா?.. பக்கவாதத்தால் நீங்கள் பாதிக்கப்படலாம்.. உஷார்.!! - Seithipunal
Seithipunal


மனித உடலின் இயக்கத்தையும், மனதின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் முக்கிய விஷயத்தை மூளை செய்கிறது. மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் உடலின் இயக்கத்திலும், பேசும் தன்மையிலும், சிந்தனையாற்றல் செயலிழப்பிலும் பல பிரச்சனை ஏற்படுகிறது. விபத்துகள், காயம், மூளையில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனையால் மூளை பாதிக்கப்படுகிறது. 

மூளையில் உள்ள இரத்தகுழியில் ஏற்படும் அடைப்பு மற்றும் இரத்தக்குழாய் தெறித்து ஏற்படும் இரத்தக்கசிவு பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் ஒவ்வொரு 6 நொடிக்கும் ஒருவர் வீதம், வருடத்திற்கு ஒன்றரை கோடி பேர் பக்கவாத பிரச்சனையால் பாதிக்கப்டுகின்றனர். இவர்களில் 60 இலட்சம் பேர் இறக்கின்றனர். 50 இலச்சம் பேர் உடலுறுப்பு செயலிழந்து இருக்கின்றனர். 

இந்தியாவில் இரண்டு இலட்சம் பேரில் 200 பேர் பக்கவாத பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதி செய்யப்படும் உள் நோயாளிகளில் 2 விழுக்காடு பேர் பக்கவாத பிரச்னையுள்ள நோயாளிகள் ஆவார்கள். மேலும், மூளை நரம்பியல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகும் நபர்களால் 20 விழுக்காடு பேர் பக்கவாத பிரச்சனையால் அனுமதி செய்யப்படுகின்றனர்.

இயல்பாக பக்கவாதம் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இளைஞர்களும் தற்போது அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகைப்பழக்கம் மற்றும் புகையிலை பழக்கம், அதிக கொழுப்புசத்து உடையவர்கள், உடல் பருமன் உடையவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள் பக்கவாத பிரச்சனையால் பாதிக்கப்படலாம். 

உடலில் திடீரென ஒருபகுதி செயலிழப்பு, கை-கால், முகம் போன்றவை செயலிழப்பது, பேச இயலாமல் போவது, திடீரென ஏற்படும் குழப்ப நிலை போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகள் ஆகும். பக்கவாதம் ஏற்பட்ட நபரை 3 மணிநேரம் முதல் 4 மணிநேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையை தொடங்கினால், உயிரிழப்பு மற்றும் உடல் இயக்க பாதிப்பு தவிர்க்கப்படும். 

அதிகளவு இரத்த அழுத்தம் மூளையில் ஏற்படும் பட்சத்தில் அது இரத்த கசிவை ஏற்படுத்துகிறது. இதனால் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதற்கான மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். புகைப்பழக்கம், புகையிலை பழக்கத்தை கொண்டவர்கள் அதனை கைவிட வேண்டும். உடல் பருமனை கட்டுக்குள் வைக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவை சாப்பிட கூடாது. பற்களில் கறை, ஈறுகளில் சீல், வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கும் பக்கவாத பிரச்சனை ஏற்படலாம். பற்களின் சுத்தம் முக்கியம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If You Lazy about Cleaning Teeth You May Be Affect Stroke or Hemiparesis


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->