மூன்றாவது கண்ணால் கழுத்திற்கு ஏற்படும் பேராபத்து.. தவிர்ப்பது எப்படி?..!!
how to cure neck pain
கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக கழுத்து வலியானது 50 வயதிற்கும் அதிகமுள்ள நபர்களுக்கு ஏற்படும் வியாதியாகும். இப்போதுள்ள காலகட்ட நிலையில் இளம்பருவ வயதுள்ள நபர்களுக்கு கழுத்து வலியானது ஏற்படுகிறது.
மேலும்., அலுவலகத்தில் பணியாற்றி வரும் இளைய தலைமுறையினர் கழுத்து வலி இருப்பதாக கூறுவது இயல்பாக மாறிவிட்டது. கழுத்து வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் இருக்கிறது.
கழுத்து பகுதியில் இருக்கும் தசைகள் அதிகளவு சோர்ந்து போவதன் காரணமாக கழுத்து வலியானது ஏற்படுகிறது. கழுத்தில் இருக்கும் தசைகள் தொடர்ந்து சோர்வடைவதன் காரணமாக கழுத்தை தங்கி பிடிக்க இயலவில்லை.
மேலும்., தினமும் அலுவலகத்தில் 8 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை அசையாமல் இருந்து வருவதால் கழுத்து வலியானது தொடர்ந்து ஏற்படுகிறது. இந்த நேரங்களில் பிற பணிகள் தொடர்ந்து இருந்தாலும்., அலைபேசியை கட்டாயம் உபயோகம் செய்து கொள்கிறோம்.
அலைபேசியை உபயோகம் செய்யும் நேரத்தில் குனிந்த தலையை நிமிராமல் இருப்பதாலும்., அதிகளவு பொழுதுபோக்கு விளையாட்டுகள் விளையாடுவதாலும் கழுத்து வலியானது தொடர்ந்து ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு அலைபேசி மற்றும் கணினி உபயோகம் செய்யும் போது தலையை நேராக வைத்து உபயோகம் செய்ய வேண்டும்.
இதனால் தசைகளின் இறுக்கத்தை குறைக்க இயலும் என்றாலும்., சிறிதளவு பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றும்., கீழே அமரும் நேரத்தில் வளைந்து நெளிந்து அமராமல் உட்கார வேண்டும் என்றும்., கணினியில் பணியாற்றும் போது கால்கள் தரையில் படும் வகையிலும் இருக்க வேண்டும். எந்த செயலக இருந்தாலும் அளவாக பயன்படுத்தும் பட்சத்தில் பிரச்சனை இல்லை.
Tamil online news Today News in Tamil