கர்ப்பகாலத்தில், உணவு முறை குறித்து கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.!  - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி காலத்தில் நீங்கள் முன்பை விட அதிகமாக சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் அப்படி சாப்பிட்டால் தான் உங்களது கருவில் வளரும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சியும் அறிவுத்திறனும் அப்போது தான் மேம்படும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடும் உணவுகளில் தான் அவர்களது குழந்தைகளின் ஆரோக்கியமே அடங்கியுள்ளது. எனவே நீங்கள் ஒரு சில உணவுகளை முக்கியமாக சாப்பிட வேண்டியது அவசியமாகும். மேலும் கர்ப்ப காலத்தில் உண்டாகும் அறிகளான வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை போக்கவும் இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்.

இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன கால்சியம், இரும்புச்சத்து பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம் பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

ஆரஞ்சு பழம் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

முட்டை முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது. 

மீன் பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

பால் கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.

மயக்கம் வராமல் இருக்க ஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டு படும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம். மாத்திரைகள் தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு அதிகமாக இருக்கும் தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.

புரோகோலி புரோகோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு, இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப், கூட செய்து குடிக்கலாம்.

நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம் பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து பயன்படுத்தவும்.

தண்ணீர் கர்ப்பகாலத்தின் போது தண்ணீர் அதிகம் பருகவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பன்னிரண்டு டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். தண்ணீராகக் குடிக்காவிட்டாலும் அதற்கு இணையாக தயிர், மோர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் சேய் நல்ல முறையில் வளர்ச்சி பெறும்.

எண்ணெய் உணவுகள்? எண்ணெயைப் பொறுத்த வரை, தினமும் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வரை சேர்த்துக் கொள்ளலாம். மாலை வேளையில் பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என்று ஏதேனும் முளைகட்டிய பயறு வகை ஒன்றை வேக வைத்து டிபனாக சாப்பிடலாம். சர்க்கரை நோய்? சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஜெஸ்டேஷனல் டயபடிஸ் பிரச்சினை ஏற்படலாம். எனவே, அந்தப் பெண்கள் பால், காபி வகைகளில் சர்க்கரையை தவிர்த்து, இடைப்பட்ட நேரங்களில் மோருடன் வெள்ளரி, மாங்காய் அல்லது காய்கறி சூப் எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவுக்கு எண்ணெயில் பொரித்தவற்றை தவிர்க்கவும்.

உடற்பயிற்சி கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இந்த உடற்பயிற்சிகள் உங்களது கர்ப்ப காலத்தை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளும். மேலும் பிரசவம் சுலபமாக நடக்கவும் இது உதவியாக இருக்கும். எனவே மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை அலட்சியம் செய்யாமல் செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக சிலரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அவர்கள் மட்டும் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கலாம். மற்றவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யலாம்.

கர்ப்ப காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது தவறு. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.

கர்ப்ப காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்பட்டால் உப்பின் அளவை மாற்றலாம். ரத்த கொதிப்பு இருக்கிறது என உப்பை ஒரேயடியாக குறைத்து விடவோ தவிர்க்கவோ கூடாது. அது மிகவும் ஆபத்தானது.

பொதுவாகவே மனிதர்களுக்கு உப்பு அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உப்பை தவிர்த்தால் அது பெண்களின் உடல் நலனையும் குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கும். பெண்களுக்கு கைகால்கள் வீக்கம் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே கவனம் தேவை.

கர்ப்ப காலத்தில் பெண்கள் புகையிலை போடக்கூடாது. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ள பெண்கள் அதை உடனடியாக நிறுத்துவது நலம். பின் எந்த காலத்திலும் அதை தொட வேண்டாம். ஏனென்றால் அவை பெண்களை மட்டுமல்ல குழந்தையின் உடல்நலனையும் கடுமையாக பாதிக்கும்.

வீட்டில் உள்ள வேறு யாருக்காவது புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கூட கர்ப்பிணிகளுக்கு அது ஆபத்தாகும். எனவே வீட்டில் யாரையும் புகை பிடிக்க அனுமதிக்க வேண்டாம். 

தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள், பாக்கெட் உணவுகள், ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. சுகாதாரமான சூழ்நிலையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளை வீட்டில் தயாரித்து சாப்பிடுவது நலம்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு திடீரென்று சில உணவுகள் மீது ஆர்வமும் வெறுப்பும் ஏற்படும். அப்போது ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும். 

குறிப்பாக இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் ஆகியவற்றை பெண்கள் சாப்பிடுவது நலம்.

கால்சியம் அதிகரிக்க தயிர், கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி கீரை, மீன், நல்லெண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள  வேண்டும்.

மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் சுயமாக எந்த மருந்தையும் வாங்கி சாப்பிடக்கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

follow these during pregnant 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->