தமிழகத்தில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம் வாபஸ்.!!
doctors struggle withdraws
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு,புதிய உச்சத்தை தொட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று ஒரேநாளில் 1,072 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 18,670 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திருப்பி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 14,901 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். 7 கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம் அறிவித்து இருந்தனர். தற்போது கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் செவிலியர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
English Summary
doctors struggle withdraws