கருவேப்பில்லை மூலமாக உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


தினமும் நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் கருவேப்பில்லை முக்கியமான ஒன்றாகும். அனைத்து குழம்புகள் மற்றும் தொடுக்கறிகளில் சிறிதளவு கருவேப்பில்லையை நாம் கட்டாயம் சேர்க்கும் பழக்கத்தை வைத்திருப்போம். 

இவ்வாறாக நாம் செய்யும் உணவு பொருட்களில் கறிவேப்பிலையை சேர்த்தாலும் சிலர் சாப்பிடாமல் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். கருவேப்பில்லையின் மூலமாக பல உடல் வியாதிகள் தீர்க்கப்படுகிறது. 

இதனை சாப்பிட்டால் உடலுக்கு பலம் அதிகரிக்கும், பசியை அதிகளவு தூண்டி பசியின்மை பிரச்சனையை சரி செய்யும்.. இது போன்ற பல நன்மைகள் கிடைக்கிறது. இது குறித்து இனி நாம் விரிவாக காணலாம். 

கருவேப்பிலையை சாப்பிடுவதால் உடலின் பித்தம் குறைக்கப்பட்டு உடல் சூடு குறைகிறது. கருவேப்பில்லை கீரை நமது மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். சீதபேதி வயிற்று உளைச்சல், குமட்டல் மற்றும் நாள்பட்ட காய்ச்சலுக்கு நல்ல தீர்வை அளிக்கும். 

பித்தம் அதிகரித்து உடலில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க கறிவேப்பில்லை அதிகளவு உதவி செய்கிறது. வாந்தி, நாக்கு ருசியில்லாது போகுதல், வயிரோட்டம், சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் உணர்வு, பசியின்மை, சளி போன்ற பல பிரச்சனையையும் சரி செய்யும். கண்களின் ஒளி, முடி நரை, மேனி அழகு பெறுதல் போன்றவற்றிற்கும் உதவி செய்யும். 

கருவேப்பில்லையின் சாறு இரத்த வெள்ளையணுக்கள் பலம் பெற உதவும். டயட் இருக்கும் நபர்கள் கருவேப்பில்லை துவையலை சாப்பிடும் சாப்பாட்டுடன் சேர்ந்து கொள்ளலாம். கண்களின் ஒளி குறைவு, நரை திரை பிரச்சனை, நாக்கின் ருசி உணரும் குறைபாடு போன்றவற்றிற்கு கருவேப்பில்லை நல்ல பயனை தருகிறது. கறிவேப்பிலையை அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவோடு சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வர முடி நன்கு வளரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benifits of karuvepillai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->