காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனை..!!
Avoid Morning food, Defiantly infect with pressure and sugar diseases
மனிதர்களின் வாழ்வில் காலை உணவிற்கென முக்கிய பங்கு இருக்கிறது. நமது உடல் இரத்தத்தின் சர்க்கரையை சரியான அளவில் வைத்து, நமது உடல் நலனை நீண்ட நாட்கள் காக்கிறது. பெரும்பாலானோர் ஈடுபடும் உடல் எடை குறைப்பு முயற்சியில், காலை உணவு தவிர்ப்பது அங்கமாக இருக்கிறது.
காலை நேர உனவுகளை தவிர்த்தால் உடலின் கலோரி குறைந்து, உடல் எடை குறையும் என்று எண்ணுகின்றனர். வேலை மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும், நீண்ட தூர பயணத்தை மேற்கோள் கட்டியும் சாப்பிட நேரம் இல்லாமல் காலை உணவை தவிர்ப்பவரும் இருந்து வருகின்றனர்.
இவ்வாறாக பல காரணத்திற்காக காலை உணவுகளை தவிர்ப்பதால் நீரழிவு நோய் ஏற்படும். இது கிராம புறத்தை விட நகர்புறத்தில் அதிகளவு இருப்பதாகவும், நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணியாக காலை உணவுகளை தவிர்க்கும் நடவடிக்கை அமைகிறது.
இதனால் காலை உணவுகளை தவிர்க்காமல் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், வாரத்தின் நான்கு நாட்களாவது காலை உணவுகளை எடுத்துக்கொள்ள பட்சத்தில் கட்டாயம் நீரிழிவு நோய் ஏற்பட 55 விழுக்காடு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தெரியவருகிறது.
இதனைப்போன்று உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் அதிகரித்து, மனஅழுத்தம் ஏற்படவும் வழிவகை செய்கிறது. காலை உணவை தவிர்த்து நொறுக்கு தீனியாக எடுத்தாலும், இன்ஸுலின் செயல்பாடு எதிர்மறை மாற்றத்தை அடைந்து, மனஅழுத்தம் அதிகமாகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Avoid Morning food, Defiantly infect with pressure and sugar diseases