தொகுதிக்குள்ளே அடிவச்சிடாதீங்க..! வேண்டுதலோடு நிற்கும் திமுகவினர்.. இப்படி ஒரு நிலையா.?!
vellakoil saminadhan has issue
திமுகவின் ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை மந்திரியாக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். தொகுதி சீரமைப்பின் காரணமாக இவரது தொகுதியான வெள்ளக்கோவில் தொகுதி காணாமல் போனது. இதன் காரணமாக, 2016 சட்டப்பேரவை தேர்தலில் புதியதாக உருவாகியா மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்டார். அப்பொழுது உள்ளூர் கட்சியினரை நம்பாமல், சொந்தக்காரர்களை நம்பிய காரணத்தால் தோல்வி அடைந்தார்.
தற்போது மீண்டும் 2021 தேர்தலில் உடுமலை, மடத்துக்குளம் அல்லது காங்கேயம் தொகுதியில் அவர் போட்டியிட மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார். நம்முடைய தொகுதி பக்கம் வராமல் இருக்க வேண்டும் என்று உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், உள்ள பலரும் எம். எல்.ஏ சீட் கனவு காணுவதால் இடைவிடாமல் சாமிகளை கும்பிட்டுக் கொண்டு இருக்கின்றனராம்.
உதயநிதிக்காக தன்னுடைய இளைஞரணி செயலாளர் பதவியையே விட்டுக் கொடுத்த சாமிநாதனுக்கு இப்படி ஒரு நிலையா என்று அவருடைய ஆதரவாளர்கள் கவலையில் இருக்கின்றனர்.
English Summary
vellakoil saminadhan has issue