அப்பாவை போல பிள்ளை.. உதயநிதி ஸ்டாலினை பங்கப்படுத்திய நெட்டிசன்கள்.!
udhayanidhi stalin election campaign in thundu seetu
நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், இந்த மாதம் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் அதிமுக மற்றும் திமுக கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆசூர், தென்பேர், நந்திவாடி, முட்டத்தூர், ஈச்சகுப்பம், திருநந்திபுரம் ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அது என்னவென்று பார்த்தால், ஸ்டாலினை போலவே உதயநிதி ஸ்டாலினும் துண்டு சிட்டு வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். ஆகையால் நெட்டிசன்கள் அப்பாவை போல பிள்ளை என கலாய்த்து வருகின்றனர்.
English Summary
udhayanidhi stalin election campaign in thundu seetu