இந்த பிரச்சனைகள் இருக்கிறதா?.! இந்த கோவிலுக்கு கண்டிப்பாக செல்லுங்கள்.!!
இந்த பிரச்சனைகள் இருக்கிறதா?.! இந்த கோவிலுக்கு கண்டிப்பாக செல்லுங்கள்.!!
பைரவரின் எட்டு தோற்றங்களையும் ஒரே ஆலயத்தில் வழிபடும் திருத்தலமாக விளங்குவது பைரவபுரம். இந்த பைரவபுரத்தை அழிவிடைதாங்கி என்றும் கூறுவர். இந்த ஆலயமானது சுமார் 500 வருடங்கள் பழமையானதாகவும்., இந்த ஆலயத்தில் இருக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
அந்த வகையில் காசியில் இருக்கும் காலபைரவரின் ஆலயத்திற்கு ஈடானதாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. மேலும் இந்த ஆலயத்தில் இருக்கும் பைரவரின் வாகனமான நாய் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது.
தமிழகத்தை பொறுத்த வரையில் பல பைரவர் ஆலயங்கள் இருந்தாலும்., இந்த ஆலயத்திற்க்கென தனி சிறப்பும்., இந்த ஆலயத்தில் இருக்கும் விக்கிரகமானது ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
வாஸ்து பகவானுக்கு குருவான கால பைரவரை வணங்கினால்., நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு விலக்கம் கிடைக்கும். மேலும் சனிபகவானுக்கும் பைரவர் குரு என்பதால்., சனியின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விலக்கம் அடையலாம்.
மேலும் திருமணத்தடை., கணவன் மனைவி பிரச்சனை முடிவுக்கு வருதல்., பில்லி சூனியம் பிரச்சனைகள்., வியாபரத்தில் விருத்தி., வீட்டில் அடிக்கடி ஏற்படும் சண்டைகள் முடிவுக்கு வருதல்., பூர்விக தோஷம் முடிவுக்கு நீங்குதல்., முன்னோர்களின் சாபம் நீங்குதல்., பெற்றோர்களின் பாவம் மற்றும் மன அமைதி போன்றவை கிடைக்கும்.
இந்த ஆலயமானது தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையின் போது காலை 9 மணி முதல் இரவு 8 வரை கோவில் திறந்திருக்கும். இந்த ஆலயமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் தாலுகாவில் அமைந்துள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ளது.
English Summary
TO PRAY LORD PAIRAVAR FOR THIS PROBLEM.