பஞ்சாங்கத்தின் படி தாக்கிய கொரோனா, கட்டுக்குள் வரும் நாளையும் கூறுகின்றது.!
tamil panjangam says cure date for corona virus
சீன நாட்டில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸானது உலகம் முழுவதிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இதன் தாக்கம் நாளுக்குள் நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போதுவரை இந்தியாவில் சுமார் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்திற்கும், இது பரவியதற்கும் பல விதமான காரணங்கள் கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் பஞ்சகமான ஆற்காடு பஞ்சாங்கத்தில் இதனை முதலிலேயே கூறியிருப்பதாக தெரியவருகிறது. இந்த பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாதத்தில் மேற்கு திசையில் இருந்து புதிய நோய் பரவும். உலகையே ஆட்டிவைத்து ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் கட்டுக்குள் வரும், ஜூனில் முற்றிலும் குணமடையும் என்று தெரிவித்துள்ளது.
இதன்படி சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிவைத்து வரும் நிலையில், இப்பஞ்சாங்கத்தின் படி வரும் ஏப்ரல் மாதத்தில் கட்டுக்குள் வரலாம் என்றும், ஜூன் மாதத்தில் முற்றிலும் குணமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
tamil panjangam says cure date for corona virus