சசிகலாவை கொந்தளிக்கவைத்த தினகரன்.! அமமுகவில் உண்டான பதற்றம்.!
sasikala Getting angry by dhinakaran
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பதாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அமமுக மற்றும் அதிமுக இணைப்பு குறித்து ஊடகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என டிடிவி தினகரன் கறாராக பதிலளித்த இருக்கின்றார். அமமுக மற்றும் அதிமுக, பாஜக கூட்டணியில் இணையுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அந்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளிக்க மறுத்து இருக்கின்றார்.
மேலும், அமமுக தலைமையில் புதிய கூட்டணி ஒன்று அமையும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இத்தகைய சூழலில், அமமுகவை தலைமையாக அதிமுக பாஜக கூட்டணி ஏற்றுக்கொண்டால் அவர்களுடன் கூட்டணி வைக்க தயார் என்று டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.
இந்த கருத்தில் சசிகலாவிற்கு உடன்பாடு இல்லை என்றும், எனவே, இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்படியாவது பாஜக- அதிமுக கூட்டணியில் பங்கு பெற வேண்டும் என்பது சசிகலாவின் விருப்பமாக உள்ளதாகவும் இத்தகைய சூழலில் இந்த கூட்டணி ஏற்பாட்டுக்கு வேட்டு வைக்கும் விதமாக தினகரன் நடந்துகொண்டது சசிகலாவை கோபத்தில் கொந்தளிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
sasikala Getting angry by dhinakaran