பேராசை பெருநஷ்டம்.. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்., என்ற குறளுக்கேற்ப சம்பவம்.!
Sarath Kumar and Karunas Loss His worth due to Greed TN Election 2021
கூட்டணியில் கொடுக்கும் தொகுதியை வாங்கிவிட்டு அமைதியாக தேர்தலில் நின்று வெற்றி அடைந்த ச.ம.க மற்றும் மு.பு.ப கட்சி, வாயால் வந்த வினையால் வேட்பாளர் கிடைக்காமல் தவித்து வந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு தொகுதி, 2 தொகுதி என்று குறைந்தபட்ச தொகுதிகள் கிடைத்தாலும் அதில் மாபெரும் வெற்றியை அடைந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார், அதிமுக கூட்டணியிலிருந்து விலகி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்று பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி 40 தொகுதிகளை பெற்றுக்கொண்டார். இந்த 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடுகையில், 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைத்துவிட்ட நிலையில் பிற 13 தொகுதிகளுக்கு வேட்பாளர் கிடைக்காமல் அல்லாடியுள்ளார்.
13 தொகுதிகளுக்கும் உள்ள வேட்பாளர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க கால அவகாசம் போதவில்லை என்று பள்ளிக்கூட பிள்ளையை போல காரணம் தெரிவித்து, தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கையும் வைத்தார். இதனையடுத்து எப்படியோ 10 தொகுதிகளுக்கு உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவே, மீதமுள்ள மூன்று தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் வசத்திடமே ஒப்படைத்தார்.
அதிமுக கூட்டணியிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் விலகுவதாக அறிவித்து பல பரபரப்பு சர்ச்சை கருத்துகளை பேசிவந்த நிலையில், 84 தொகுதிகளில் முக்குலத்தோர் புலிப்படை தனித்து களம் காண்பதாக அறைகூவல் விடுத்தார். பின்னர் மறுநாளே திமுகவிற்கு கடிதம் அனுப்பி 84 தொகுதிகளை கேட்ட நிலையில், கூட்டணி கட்சியையே இறுதிவரை காக்கவைத்து சிறிய அளவிலான தொகுதியை ஒதுக்கீடு செய்த திமுக மவுனம் காத்தது.
இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று அரைமணிநேர காத்திருப்பு போராட்டத்திற்கு பின்னர் தனது ஆதரவு கடிதத்தை வாபஸ் பெற்று கருணாஸ் வாங்கி வந்தார். இதன்பின்னர், 84 தொகுதிகளில் களமிறங்கினால் பணம் மற்றும் வேட்பாளர்கள் தேடல் என பெரும் பிரச்சனை இருப்பதால், இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்தார்.
இந்த இரு கட்சிகள் தங்களுக்கு கிடைத்த தொகுதியை வைத்து மக்களிடம் அறிமுகமான நிலையில், தற்போது அரசியலில் வாய்ப்பை இழப்பது போல சூழ்நிலையை உருவாக்கி பெரும் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
திருக்குறள் மற்றும் விளக்கம்:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
உண்மையை உணர்ந்தவர்களின் வாய்ச் சொல் எந்த அளவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ, அதுபோல் நல்ல இனிமையான வார்த்தைகள் மனத்தில் இன்பத்தையும், நெஞ்சில் ஈரத்தையும் கசிந்துருகச் செய்துவிடும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Sarath Kumar and Karunas Loss His worth due to Greed TN Election 2021