திமுக எம்எல்ஏ தற்கொலை முயற்சி விவகாரம்.! அதிரவைக்கும் பின்னணி காரணங்கள்.!  - Seithipunal
Seithipunal


பூங்கோதை ஆலடி அருணா திமுகவின் பெண் எம்எல்ஏகளில் முக்கியமான ஒருவர். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர். தற்போது, அவர் எம்எல்ஏவாக இருக்கின்றார். இவருடைய தந்தை ஆலடி அருணா முன்னாள் தமிழக அமைச்சராக இருந்தவர். 

இந்த நிலையில் நேற்று இரவு பூங்கோதை திமுகவின் உட்கட்சி பூசல் காரணமாக அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மயக்க நிலையில் அவர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தென்காசி மாவட்ட செயலாளர் பத்மநாபனுக்கும், பூங்கோதைக்கும் இடையே மனகசப்பு இருந்து வந்துள்ளது. 

இதனால் சீவலப்பேரி பாண்டியன் என்பவர் பூங்கோதையை அவதூறாக பேசி இருக்கின்றார். அத்துடன் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பூங்கோதையின் குடும்ப உறவுகளுக்கு இடையே போட்டி நிலவியது. இதனால், மனமுடைந்த பூங்கோதை நேற்று இரவு தூங்க செல்வதற்கு முன்பாக அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இன்று காலை அது நீண்ட நேரம் ஆன பின்பும் கூட அவர் எழுந்து வெளியில் வராத நிலையில், குடும்பத்தினர் சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for poongodhai mla suicide attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->