சசிகலா விடுதலை ஆவதில் புதிய சிக்கல்! அதிரடி திருப்பத்தால் அதிர்ச்சியில் அமமுக!
oppose sasikala pre release from jail
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை முன்கூட்டி விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நான்காண்டு சிறைத் தண்டனை காலம் வருகின்ற பிப்ரவரி மாதம் நிறைவு பெறும் நிலையில், சசிகலா முன்கூட்டியே விடுதலை பெறுவார் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியே வருவார் என கூறப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. இந்த நிலையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வருகிறார் என ஒரு தகவல் பரவி வருகிறது. அதே சமயம் ஜனவரி மாதத்தில் நடைபெறும் தினகரனின் மகள் திருமணத்திற்கு நிச்சயமாக சசிகலா வருவார் எனவும் தகவல்கள் வருகிறது.
இந்த நிலையில் நன்னடத்தை விதிகள் காரணம் காட்டி முன்கூட்டியே சசிகலாவை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் என்பவர் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.
சிறையில் இருந்து வெளியே சென்று பொருட்களை வாங்கிய சசிகலா குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் சிறையில் இருக்கும் சசிகலா கடைவீதியில் பொருட்கள் வாங்கி வந்ததை நான் பார்த்ததாக முத்துமாணிக்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
oppose sasikala pre release from jail