மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு 39 தொகுதிகளை வென்று கொடுத்தவரை, தற்போது பாஜகவுடன்!  - Seithipunal
Seithipunal


கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று, மெகா வெற்றியை பதிவு செய்தார்கள். இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் திமுக கூட்டணிக்கு வியூகங்களை அமைத்து கொடுத்த ஓஎம்ஜி நிறுவனத்தின் சுனில். 

இவர் பிரசாந்த் கிஷோர் உடன் ஆரம்பகட்டத்தில் வியூகங்கள் அமைப்பதில் ஒருவராக இணைந்து செயல்பட்ட நிலையில் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனித்தனியாக செயல்பட்டார்கள். கடந்த மக்களவைத் தேர்தல் வரை திமுகவிற்காக ஓஎம்ஜி நிறுவனம் பணியாற்றிய நிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அடுத்து வர உள்ள சட்டசபை தேர்தலுக்காக, திமுக பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்துவது அறிந்துகொண்டு திமுகவிற்கு பணியாற்றுவதை நிறுத்திக் கொண்டது. 

இந்த நிலையில் இந்நிறுவனத்தின் சுனில் கர்நாடக பாஜக அரசின் ஆலோசகராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. திமுகவிற்கு பணியாற்றுவதில் சுனில் விலகிய நிலையில் அந்த இடத்திற்கு 380 கோடி கொடுத்து ஐபேக் நிறுவனத்தின்  பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OMG Sunil joins government of Karnataka as an Advisor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->