பெரியார் மண்ணில், பெரியார் பேரன் தோற்ற பரிதாபம்.!
evks elangovan failed for loksabha election
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக 09 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் இது திமுகவுக்கு பின்னடைவாக உள்ளது. ஏன் என்றால், பெரியார் மண்ணில் பாஜகவை வரவிடமாட்டோம் என்று கூறிக்கொண்டு இருந்த திமுகக்கு, பெரியாரின் பேரனான இவிகேஎஸ் இளங்கோவன் தோல்வி அடைந்தது வருத்தைத்தை தந்துள்ளது.
திமுகவினர் தமிழகம் பெரியார் மண்ணு என்று கூறிவந்தனர், மேலும் திமுகவை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் தமிழகம் பெரியார் மண்ணு என்று கூறிவந்தனர். ஆனால் பெரியாரின் பேரனான இவிகேஎஸ் இளங்கோவன் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திமுக கட்சியை சேர்ந்தார்கள் பெரியார் சிந்தனை இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் காலுன்றமுடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
evks elangovan failed for loksabha election