சசிகலாவுடன் அவசர சந்திப்பு., தினகரன் கூறப்போகும் உற்சாக செய்தி.! சூடுபிடிக்கும் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நடந்த ரகசிய சந்திப்புகள் குறித்து ஆறு மாதங்களுக்கு பின்னர், சசிகலாவை சந்திக்க இருக்கும் தினகரன் விவரிக்க உள்ளார். 

கொரானா ஊரடங்குக்கு முன்பு மத்திய அரசை பட்டும்படாமலும் தினகரன் விமர்சித்து வருவார். ஆனால், கொரோனா தீவிரம் அடைந்த நாளிலிருந்து, அரசியல் போக்கையே முற்றிலுமாக தவிர்த்து விட்டார் தினகரன். இந்நிலையில், சமீபத்தில் டெல்லிக்கு ரகசிய சந்திப்பிற்காக தினகரன் பயணம் மேற்கொண்டார். 

சசிகலாவின் முன்கூட்டிய விடுதலை சாத்தியமா என்பது குறித்து சில தலைவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், டெல்லியில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து சசிகலாவை சந்தித்து தினகரன் விளக்கை இருக்கின்றார். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு தினகரன் சசிகலாவை சந்திக்க இருக்கின்றார். 

தினகரன் மீது சசிகலாவுக்கு பல்வேறு விஷயங்களில் அதிருப்தி இருந்தாலும், கூட அவரை முழுமையாக நம்புகிறார். சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவாரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை. 

இருப்பினும் ஜனவரி மாதம் நிச்சயம் சசிகலா விடுதலை அடைவார். இந்நிலையில், தினகரன் சசிகலாவை சந்திக்க இருப்பது குறித்து தீயாக விவாதங்கள் பரவி வருகின்றது. விரைவில் அமமுகவினருக்கு சசிகலா விடுதலை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhinakaran meets sasikala about sasikala release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->