அந்த ஒரு மாநகராட்சி - தேமுதிகவுடன் ரகசிய கூட்டணி பேசும் திமுக - வெளியான பரபரப்பு தகவல்.!
cuddalore dmk and dmdk info
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் மாநகராட்சி தேர்தலில் மறைமுகமாக திமுகவும் - தேமுதிகவும் கூட்டணி வைக்க உள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் ஏற்கனவே, அதிமுக நாற்பத்தி மூன்று வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இதேபோல், தனித்து களமிறங்கி உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து, இன்று அல்லது நாளை காலை அறிவிக்க உள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்ட திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியான அந்த தகவலின்படி, கடலூர் மாநகராட்சிகள் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடக்கூடிய 2 அல்லது 3 வார்டுகளில் திமுகவினர் அவர்களுக்கு ஆதரவாகவும், தேமுதிக போட்டியிடாத மற்ற வார்டுகளில், திமுகவுக்கு ஆதரவாக தேமுதிகவினர் செயல்படுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ரகசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் சிதம்பரம் நகராட்சியிலும் திமுக-தேமுதிக இடையே ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
English Summary
cuddalore dmk and dmdk info