அதிமுகவை பலிகொடுக்கும் பாஜக.?! மக்களவை தேர்தலை போல மண்ணைக்கவ்வ செய்ய பலே திட்டம்.?!
bjp may occupying admk slowly
மாநில ஆட்சியில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்று பாஜக முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. தமிழகத்திலும் தங்களது கட்சியை பரபரப்பாக வைத்துக் கொள்ள தற்போது பல விஷயங்களை கையில் எடுத்து அட்டாக் செய்து வருகின்றது. மெல்ல மெல்ல வைரஸ் போல பரவி மாநிலத்தில் உள்ள கட்சியை ஒன்றுமில்லாததாக்கி ஆட்சியை பிடிப்பது பாஜகவின் பாரம்பரிய திட்டம்.
தற்போது அந்த வரிசையில் அதிமுக குறி வைக்கப்பட்டுள்ளது. பாஜக கேட்கும் தொகுதிகளை அதிமுக கொடுத்துவிடும். மெல்லமெல்ல அதிமுகவின் வாக்கு வங்கியை தனதாக்கிக் கொண்டு அதிமுகவை பூஜ்ஜியமாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னைக்கு வந்த அமித்ஷாவை அதிமுக தொண்டர்கள் கட்சிக் கொடியோடு வரவேற்றனர்.
அரசு விழாவாக இருந்தபோதிலும் கூட்டணி குறித்து அதிமுக நேரடியாக சரணடைந்தது. எம்ஜிஆரை கையில் எடுத்து அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அரசியல் ஆட்டத்தை பாஜக துவங்கியுள்ளது. தற்போது பாஜக அதிமுகவிடம் 50 தொகுதிகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 50 தொகுதிகளை பாஜக வசம் அதிமுக கொடுக்கும்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆட்சியை பிடிப்பது குதிரைக் கொம்பாக மாறிவிடும்.
இதனால் திமுக எளிமையாக ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. அந்தவகையில் திமுகவின் வெற்றிக்கு உதவுவது போல பாஜகவின் பணி உள்ளது. இந்த தேர்தலில் திமுகவை ஜெயிக்க விட்டு அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் மெல்ல மெல்ல ஊடுருவி ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பாஜக கணக்குப் போடுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
bjp may occupying admk slowly