சூனியம்., பில்லி., ஏவல் மற்றும் வசியம் இவர்களை மட்டும் ஒன்றும் செய்யாதாம்.! ஏன் தெரியுமா?.!!
Billi and sooniyam is not working for this men
கேரளாவில் நாம் சுற்றுப் பயணம் மேற்கொண்டால் அறிந்து கொள்ளலாம்., பில்லி சூனியம் போன்றவை இருக்கிறதா? என்று.. பட்டப்பகலிலேயே பில்லி., சூனியம் வசியம் போன்ற பல செயல்களைச் செய்யவும் அங்கு மந்திரவாதிகள் இருக்கின்றனர்.
அந்த வகையில் யார் யாருக்கெல்லாம் இந்த பில்லி., சூனியம் மற்றும் வசியம் செய்திருப்பார்கள் என்பதை பற்றி முதலில் பார்ப்போம்.
எதிரி:
தனக்கு பிடிக்காத ஒரு நபரை வாழ்வில் தோல்வியடையவும்., அவருக்கு நஷ்டம் ஏற்படவும்., அதிக துன்பங்களை அனுபவிக்கும் பொருட்டு எதிரிக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுகிறது.
மூளைகட்டு:
ஒரு நபரின் மூளையை மட்டும் கட்டுப்படுத்தி அவரை நமது பேச்சை மட்டும் கேட்கும்படி தலையாட்டி பொம்மையாக மாற்றுவதற்கு மூளைக்கட்டு வைக்கப்படுகிறது.
வசியம்:
ஆண் அல்லது பெண்ணை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் தான் சொல்வதை மட்டும் கேட்குமாறு இருக்க நினைப்பவர்கள் இந்த வசியத்தை வைக்கின்றனர்.
சூனியம்:
ஒரு நபரை அழிக்க வேண்டுமென்றால் அதாவது தற்கொலை செய்ய தூண்ட வேண்டும் என்றால் சூனியம் வைக்கிறார்கள். அதற்கு அந்த நபரின் துணி மற்றும் காலடி மண் போன்றவற்றை பயன்படுத்தி சூனியம் வைக்கின்றனர்.
மாந்திரீகம்:
துன்பம்., தோல்வி., நஷ்டம் என்று எல்லா வகையிலும் ஒரு தனி மனிதருக்கு தீங்கு ஏற்படுத்த மாந்திரீகம் செய்கின்றனர். இதற்கு சிறப்பு பூஜைகள் வசியமும் செய்கின்றனர். அவர்கள் மாந்திரீகம் செய்து தரும் பொருளை குறிப்பிட்ட நபர் வீட்டிலோ அலுவலகத்திலோ மறைத்து வைத்துவிட்டு அதன் மூலமாக அவர்களை கட்டுப்படுத்த நினைப்பார்கள்.
சந்திரன்:
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் குறைவான பலத்துடன் இருக்கும் சமயத்தில் அவர்களை எளிதில் வசியம் செய்ய முடியும். சந்திரன் பலமாக இருந்தால் வசியம் செய்ய முடியாது.
யாருக்கெல்லாம் இதன் தாக்கம் இருக்காது:
வேதம் ஓதும் நபர்கள்., சாமியார்கள் போன்றவர்கள் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். நாம் எந்த இடத்திற்குச் சென்றாலும் நம்மை பாதுகாப்புடன் அழைத்து வர குலதெய்வத்தின் துணை வேண்டும்., குலதெய்வத்தை வணங்கி வந்தால் எந்த விதமான மாந்திரீகமும் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தாது.
English Summary
Billi and sooniyam is not working for this men