சசிகலா வெளிவரும் முன்னே ஒரு முக்கிய அறிவிப்பு.! உச்சகட்ட பரபரப்பில் இரு கட்சிகள்.!  - Seithipunal
Seithipunal


சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் முன்பே அதிமுக மற்றும் அமமுக கட்சி இணைப்பு நிகழ்ந்துவிடும் என்று உறுதியாக அமமுகவினர் தெரிவிக்கின்றனர். 

தினகரனின் டெல்லி பயணமும் ஓபிஎஸ்ன் நடவடிக்கைகளும் அதற்கு ஆதாரமாக மாறியுள்ளன. அமமுக நிர்வாகி வெற்றிவேல் சிறையில் இருந்து சசிகலா வந்ததும், அதிமுகவை விட்டு மீட்கும் பணிகளை துவங்குவார். பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து சசிகலா மற்றும் தினகரன் இருவரும் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அதிமுகவில் இணைந்த உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தென்மாவட்டங்களில் அமமுகவுக்கு கணிசமான வாக்குகள் இருக்கிறது நாம் அவர்களை எளிதில் புறக்கணிக்க முடியாது என்று கூறியுள்ளார். 

தற்போது அதிமுக மற்றும் அமுமுக இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுக நெருக்கம் ஆரம்பித்து இருக்கின்றது. இது குறித்து, அமைச்சர் ஆர் பி உதயகுமார் இடம் செய்தியாளர்கள் அமமுக குறித்து கேள்வி எழுப்பியதற்கு அது கட்சியின் தலைமையிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் அதற்கு பதில் இல்லை என்று அவர் சிரித்துக்கொண்டே சூசகமாக பதில் அளித்து இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது, 

இரு கட்சிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர், இதன் காரணமாக தமிழக அரசியல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk may join with admk before sasikala release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->