நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் அதிரடி திட்டம்.! குழப்பத்தில் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் கிராமப்புறங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போய்க்கொண்டே உள்ளது. 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்ற முடியாமல் போனதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதாக கூறுகின்றனர். மேலும் தற்போது அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலைமை சரியில்லை எனவும் கூறப்படுகிறது. 

மத்தியில் ஆளும் பாஜக வெளியீடு அறிவிப்புகள், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கும் வகையில் உள்ளது. பாஜகவின் எதிர்ப்பு தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கின்றனர். இதனால் மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. 

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக சலுகை அறிவிக்கப்பட்டால், தேர்தலை அறிவித்து வெற்றி பெறலாம் என அதிமுக திட்டம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. பட்ஜெட்டில் தமிழகத்திற்கு சலுகை அறிவிக்கப்பட்டால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் திமுகவினர் சற்று குழப்பத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk new plan for municipal election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->