அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மாணவர்கள்.!
yoga practice one day in govt school
இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சி கலந்து கொண்டு யோக செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் வாரத்தில் ஒரு முறை யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை இல்லை. மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். யோகா கற்றுத்தர 13,000 பயிற்சியாளர்கள் தயாராக உள்ளதால் விரைவில் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
English Summary
yoga practice one day in govt school