இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.! தருமபுரியில் நாளை(21.01.2023) வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நாளை காலை 9 மணியளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கவுசல்யா யோஜனா ஆகியவற்றின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

நடைபெறும் இடம்: நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி வளாகம்.

வயது: 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் பங்கேற்கலாம். 

கல்வி தகுதி:

8-ம் வகுப்பு முதல்

ஐ.டி.ஐ., 

பாலிடெக்னிக்,

பட்டப்படிப்புகள், 

பொறியியல் படிப்பை முடித்தவர்கள் உள்ளிட்டோர் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow employment camp in dharmapuri district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->