TNPSC தேர்வு ஒத்திவைப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. !
tnpsc exam postponed
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,789 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,421 லிருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையடுத்து பல மாநிலங்களில் நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் அரசு தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதுமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் டிஎன்பிஎஸ்சி ஒத்திவைத்துள்ளது.