குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.! இந்தாண்டு தமிழுக்கு முக்கியத்துவம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, இதையடுத்து அதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

இந்த குரூப் 1 தேர்வில் காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு நிலை பதவிகளில் உள்ள, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இதையடுத்து, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இன்று முதல் பிப்ரவரி 19-ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இனையதளத்தில் ஆன்லைன் மூலமாக தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும்  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தாண்டு குரூப்-1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc announcement group 1


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->