இந்து சமய அறநிலையத் துறையில் காலிபணியிட அறிவிப்புகள்.. இன்றே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்  இருக்கும் கோவிலில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்டவிதிகளுக்கு உட்பட்டும் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டும் பணி நியமனம் செய்ய 28.01.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைக்கான விபரங்கள்:

தலைமை ஆசிரியர்

ஆகம ஆசிரியர்

எழுத்தர்

சமையல்காரர்

சமையல் உதவியாளர்

காலிபணியிடங்கள்: 01

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

செயல் அலுவலர் , அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் , ஸ்ரீ பெரும்புதூர் - 602 105, காஞ்சிபுரம் மாவட்டம் , விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிட விபரங்களுக்கான கல்வித் தகுதி , வயது வரம்பு , நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டும் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnhrce recruitment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->