கொரோனா வைரஸ்: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? வெளியான தகவல்.!
tenth exam may be postponed for corona
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பரிசீலனை செய்துவருவதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு மார்ச் 24-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதியும் பொதுத் தேர்வுகள் முடிவடைய உள்ளன. இதனிடையே 10-ம்வகுப்புக்க்கான பொதுத்தேர்வு மார்ச் 27-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் என பல்லகல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
தமிழகத்தில் ஏற்கெனவே திட்டமிட்டு அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாணவர்கள் தேர்வு எழுத்தவுள்ள தேர்வு மையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. எனினும், மாணவர்கள் நலனை கருத்தில் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இந்நிலையில், 12-ம் வகுப்புக்கு மார்ச் 24-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதியும் முடிவடைய உள்ளது, தலா 2 பொதுத் தேர்வுகள் மட்டுமே அந்த மாணவர்களுக்கு மீதம் உள்ளது. மீதம் உள்ளதலா 2 பொதுத் தேர்வுகள் தேர்வுகளை நடத்திவிட்டு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் ஒத்திவைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், ‘‘ மாணவர்கள் தேர்வு எழுத உள்ள தேர்வுமையங்களில் கிருமி நாசினிதெளித்தல் போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் தலா 2 தேர்வுகளே மீதமுள்ளது. எனவே, மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளலாம் என்றார்.
அதே சமயம் வைரஸ் தொற்றுபரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமானால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். தேர்வுக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளதால் இனி வரும் நாட்களில் தமிழகத்தில் நிலவி வரும் சூழலைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
English Summary
tenth exam may be postponed for corona