தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! படித்த இளைஞர்களின் கனவை சுக்கு நூறாக மாற்றிய கொடூரம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
tamilnadu government new announcement
பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டம், பிஎஸ்சி கணிதத்திற்கு சமமல்ல என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிய பல்கலைக்கழகம் ஆகிய பல்கலை கழகங்கள் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம் பணிக்கு ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி, நுண்ணுயிரியல் முதுகலைப்படிப்புகள் நிகரானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே, அரசு வேலைபெற தகுதியாக கருதப்படும் பட்டபடிப்புகளுக்கு நிகராக 50 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்புகளை கருத முடியாது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல ஏற்கனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியானது அல்ல என்று தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
tamilnadu government new announcement