10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.!!
sengottaiyan press meet on jan 26
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம், முக கவசம், சமூக இடைவெளி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகின்றனர். வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செய்யப்படுகிறது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களை தவிர மற்ற நாட்களில் பள்ளிகள் செயல்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி, அதற்கான அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகை தேர்வுகள் இருக்கும். பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து முதல்வரிடம் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
sengottaiyan press meet on jan 26